
டப்லின்: வரும் நாட்களில் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் டெக்டர் ஐபிஎல் விளையாட ஒப்பந்தம் செய்யப்படலாம் என இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி நிர்ணயித்த 109 ரன்கள் என்ற இலக்கை மிகச் சுலமபாக எட்டி பிடித்தது இந்திய அணி. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டரை மனதார பாராட்டியுள்ளார் கேப்டன் ஹர்திக்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments