
எட்ஜ்பாஸ்டன்: இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என தோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளும் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ தொடரை வெல்லும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments