பாட்னா: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சி அமைக்க உள்ளது. புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார்.

from Oneindia - thatsTamil