கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு வாகனமாக கட்டணம் செலுத்தும்போது, தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்த தாமதாம் ஆகும்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

from Oneindia - thatsTamil