
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாதது புதிய சாம்பியன்களை வெளிக்கொண்டு வர உதவும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெறவில்லை. இதில் பும்ராவுக்கு மாற்று வீரரை இந்திய அணி இன்னும் அறிவிக்காமல் உள்ளது. 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி தான் இப்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments