தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 லீக் தொடரில் 57 பந்துகளில் 162 ரன்கள் விளாசி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார் ‘பேபி ஏபி’ என அறியப்படும் டெவால்ட் பிரெவிஸ். அவரது இந்த அதிரடி ஆட்டத்தை அறிந்து கிரிக்கெட் உலகமே மிரண்டு போயுள்ளது.

19 வயதான அவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டி20 லீகில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (அக். 31) நடைபெற்ற போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். இந்த இன்னிங்ஸில் மொத்தம் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் எடுத்து குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என ஏபி டிவில்லியர்ஸின் பெயரை காத்துள்ளார் அவர். அதோடு டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3-வது அதிவேக பெரிய இன்னிங்ஸ் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரெவிஸ்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்