பாரிஸ்: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி, வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் திறந்தவெளி பேருந்து ஒன்றில் வெற்றி உலா வந்தது. அப்போது அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவின் முகம் பதித்த பொம்மை ஒன்றை கையில் வைத்திருந்தார். அது சர்ச்சையானது.

இந்தச் சூழலில் பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் அடில் ராமி (Adil Rami), மார்டினஸின் செயலை கடுமையாக சாடியுள்ளார். கடந்த 2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்