தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை நேரில் பார்க்க இந்திய ரசிகர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 57,000 இந்திய ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டுகளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20-ம் தேதி அன்று ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. வரும் 18-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதுவரையில் குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன. குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்