
கத்தார்: அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1- 0 என்ற கணக்கில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இதில் தோல்வியைத் தாங்க முடியாமல் அழுத ஈரான் வீரரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அமெரிக்க வீரரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈரான்,அமெரிக்கா ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி முதல் பாதியிலேயே ஒரு கோல் அடித்தது. 38-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் இந்த கோலை அடித்தார். பதில் கோலடிக்க ஈரான் அணியினர் முயற்சி செய்தபோது, அதை அமெரிக்க வீரர்கள் சிறப்பான முறையில் தடுத்தனர். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் அமெரிக்கா புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments