இலங்கை அணிக்கு எதிராக நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா 98 ரன்களில் இருந்தபோது கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி அவர் கிரீசை விட்டுத் தாண்டி சென்றதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையாவதை ரோகித் சர்மா அபாரமாகத் தடுத்தார், அந்த அவுட்டிற்கான அப்பீலை விலக்கிக் கொண்டார். இதனால் ஷனகா மீண்டும் ஆடி சதம் எடுத்தார்.

அப்போது கடைசி 3 பந்துகளில் இலங்கை அணி வெற்றி பெற 83 ரன்கள் தேவை இருந்தது. வெற்றி பெறவே முடியாது எனும்போது ஷனகாவின் அருமையான இன்னிங்சை இவ்விதமாக அசிங்கமாக முடிக்கக் கூடாது என்று ரோகித் சர்மா முடிவெடுத்து தன் அவுட் கோரலை விலக்கிக் கொள்ள ஷனகா சதம் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்