
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், தனது குருவான அச்ரேக்கரின் நினைவு நாளான இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1989 முதல் 2013 வரை விளையாடியவர் சச்சின். சுமார் 24 ஆண்டு காலம் தனது பேட்டால் கிரிக்கெட் களத்தை ஆட்சி செய்தவர். இதன் மூலம் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34,357 ரன்களை குவித்துள்ளார். இதில் 100 சதங்களை விளாசி உள்ளார். 201 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சச்சின் இப்படி பல சாதனைகள் புரிந்தாலும், அதற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது அச்ரேக்கரின் பயிற்சிதான். சச்சினின் முதல் கிரிக்கெட் பயிற்சியாளரும் அச்ரேக்கர்தான். அவரிடம் சச்சின் பயிற்சி பெற துவங்கியபோது அவருக்கு வயது வெறும் 10 தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments