
கிம்பர்லியில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரை 1-2 என்று இங்கிலாந்து இழந்தாலும் இந்தப் போட்டியில் 6 தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பின் தன் மீள் வரவை வலுவாக நிகழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தான் தயார் என்று சொல்லாமல் சவால் விடுத்துள்ளார். அதோடு உலகக்கோப்பை அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளார் ஆர்ச்சர்.
2-வது ஒருநாள் போட்டியில் 343 ரன்களை அனாயசமாக விரட்டியதையடுத்து 3-வது போட்டியிலும் டாஸ் வென்ற கேப்டன் தெம்பா பவுமா, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதற்குத் தகுந்தாற்போல் இங்கிலாந்தும் சொதப்ப. லுங்கி இங்கிடி அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஜேசன் ராய் (1), பென் டக்கெட் (0), ஹாரி புரூக் (6) ஆகியோர் வெளியேற இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்களை எடுத்து சரிவில் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments