
இந்தியாவில் முழுக்க நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடைபெறுகின்றது.
மேலும், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சலா, குவஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறலாம் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 நாட்களில் 3 நாக் அவுட் போட்டிகளுடன் 48 போட்டிகள் மொத்தமாக நடைபெறவிருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments