சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்