சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை - சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்காக இலவச சிற்றுந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ ரயில் நிலையமான அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்