நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் போட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்த போட்டியாகும். ஏனெனில் எந்த அணியும் 205 ரன்கள் இலக்கை இவ்வளவு சீரியஸாக ச்ஸே செய்தது இல்லை. ஏதோ வருவார்கள் அடிப்பார்கள், அவுட் ஆவார்கள், கடைசியில் வாய்ப்பிருந்தால் முயல்வார்கள், ஆனால் கொல்கத்தா நேற்று தொடக்கத்திலிருந்தே சேசிங்கை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் மிக பிரமாதமாக, சீரியசாக சேஸ் செய்தனர், அதனால்தான் இந்த ஆட்டம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இரண்டு தமிழக வீரர்களான விஜய் சங்கர், சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸுக்காக பேட்டிங்கில் கலக்க ஆப்கான் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் ஹாட்ரிக்கும் பயனற்று போக கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றி வாகைக்கு அழைத்துச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்