
கடந்த ஆஷஸ் தொடரில் 4-0 என்று ஆஸ்திரேலியாவில் செம உதை வாங்கிய இங்கிலாந்து அணி இப்போது புதிய கோச் மெக்கல்லம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கையே புரட்டிப் போட்டு எல்லா அணிகளையும் புரட்டி எடுத்து வருகின்றது. இதனையடுத்து தற்போதைய ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கவிருப்பதால் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியா அணியை ‘என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா.. வம்புக்கு இழுக்காதே நான் சூராதி சூரனடா’ என்ற ரேஞ்சில் பேசி சீண்டியுள்ளார்.
கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா சொல்லி சொல்லி ஜெயித்ததை ஸ்டூவர்ட் பிராட், அந்த வெற்றியெல்லாம் கோவிட் காய்ச்சல் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளினால் யாரும் பார்மில் இல்லை. நல்ல மனநிலையில் இல்லை. ஆகவே அது ‘ஒன்றுமில்லாத ஒரு டெஸ்ட் தொடர்’ என்று வர்ணித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments