பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. அத்துடன் உலகிலேயே பிரேசில் நாட்டில் தான் கொரோனா பலி அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 1,628,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from Oneindia - thatsTamil