
அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ஓராண்டு இருந்தார். விராட் கோலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் முற்ற கடைசியில் அனில் கும்ப்ளே தன் பயிற்சியாளர் பொறுப்பைத் துறந்தார்.
விராட் கோலிக்கும் இவருக்கும் இடையே என்ன தகராறு என்பது இன்று வரை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி அணியில் நம்பர் 2-ஐ வளர்த்து விட விரும்பாத தருணம் அது. அப்போது ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கோலி காயத்துடன் ஆடுவேன் என்று அடம்பிடித்ததாக செய்திகள் எழுந்தன. பயிற்சியாளர் கும்ப்ளே அதை விரும்பவில்லை. அதனால் ரஹானேவை கேப்டனாக்கி ஆடச் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments