
அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது, இதில் இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. பேர்ஸ்டோ காட்டடி தர்பாரில் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
சவுத்தாம்ப்டனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பர்னி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அந்த அணி 78/5 பிறகு 91/6 என்று சரிந்தது, ஆனால் மீண்டும் அறிமுக வீரர் கேம்பர் (68) மீண்டுமொரு அற்புதமான அரைசதம் எடுக்க சிமிசிங் (25), மெக்பர்னி (24) ஆகியோர் பங்களிப்புடன் ஸ்கோரை 50 ஓவர்களில் 212/9 என்று உயர்த்தினார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments