கொல்கத்தா: கோமியம், கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்ற பேச்செல்லாம் நகைப்புக்குரியது என்று மேகாலயா ஆளுநர் ததகதா ராய் தெரிவித்துள்ளார். 74 வயதாகும் ததகதா ராய், 2002 முதல் 2006ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநில பாஜகவின் தலைவராக பதவி வகித்தவர். தீவிர அரசியலில் இருந்த இவருக்கு, 5 வருடங்கள் முன்பு, மேகாலயா ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.

from Oneindia - thatsTamil