
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முதல் முறையாக ஏலத்தில் வாங்கப்பட்ட தமிழக வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திர அஸ்வினுக்கு நேற்று நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடரிலிருந்து அஸ்வின் விலக வாய்ப்புள்ளது என்று ஐபிஎல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் நேற்று ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டம், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த ஆட்டத்தில் களமிறங்கிய அஸ்வின் ஒரு ஓவர் மட்டுமே வீசினாலும் தனது அனுபத்தையும், அர்ப்பணிப்பான பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments