
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் நடந்த சம்ப்வங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஸ்பானிய வீரர் கரோனா பஸ்டாவுக்கு எதிராக நடந்த 4ம் சுற்று ஆடவர் ஒற்றையர் போட்டியின் முதல் செட்டில் தன் சர்வை தோற்ற ஜோகோவிச் பந்தை வெறுப்பில் பந்தை டென்னிஸ் ராக்கெட்டினால் பின்பக்கமாக அடிக்க அது லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, அந்த பெண் நடுவர் நிலைகுலைந்து விழுந்தார், இதனையடுத்து கிராண்ட்ஸ்லாம் விதிகளின் படி நோவக் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments