அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோஸ்லின் ஜேம்ஸ், வயது 40. இவர் கடந்த ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் தனது வேலை, கார் உட்பட அனைத்தையும் இழந்தார். போதை பழக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், திருடவும் தொடங்கினார். இதனால் ‘மிகவும் தேடப்படும்’ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர். இந்த வழக்குகளில் போலீஸ் அதிகாரி டெர்ரல் பாட்டர் என்பவர்தான் ஜோஸ்லினை கைது செய்துள்ளார்.

ஒரு நாள் இரவு, தனது புகைப்படத்தை போட்டு, ‘வான்டட்’ என்று அறிவிப்பு வெளியானதை பார்த்தார் ஜோஸ்லின். அதைப் பார்த்து மனம் உடைந்தஜோஸ்லின், உடனடியாக போலீஸில் சரணடைந்தார். பின்னர் 6 மாதம் சிறையில் இருந்தார். பின்னர் 9 மாதம் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {