கடந்த மே மாதம் முதல் 5 மாதங்களாக லடாக் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் கடந்த மாதம் ஒப்புக் கொண்டன. இதன்படி இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரும் 12-ம் தேதி 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த பேச்சுவார்த்தையின்போது லே நகரை தலைமையிடமாகக் கொண்ட 14-வது பிடைப் பிரிவின் கமாண்டர் ஹரிந்தர் சிங் பங்கேற்றார். அவர் இந்த மாத மத்தியில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன், 14-வது படைப் பிரிவின் கமாண்டராக பதவியேற்க உள்ளார். வரும் 12-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஹரிந்தர் சிங்கும், பிஜிகே மேனனும் பங்கேற்பார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்