அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்த அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதம் கடந்த 29-ம் தேதி முடிந்தது. யாருக்கு ஒட்டு போடுவது என்பதை 95 சதவிகித அமெரிக்கர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாக கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துவதில் வியப்பேதுமில்லை. முப்பத்து இரண்டு மாநிலங்களில் அஞ்சல் வழியான ஒட்டுப் பதிவுகள் தொடங்கி விட்டன. அப்படி இருந்தும் இந்த விவாதத்தின் மீது ஏன் இத்துணை ஆர்வம்?

அடுத்த அதிபர் யார் என்பதை முடிவு செய்யப் போவது அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், பென்சில்வேனியா போன்ற சில மாநிலங்களில் உள்ள 'மதில் மேல் பூனை' நிலையில் உள்ள வாக்காளர்களே. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வது நாடு தழுவிய மொத்த ஓட்டுகள் அல்ல. கடந்த தேர்தலில் ஹிலாரி கிளின்டனை விட 28 லட்சம் ஓட்டுக்கள் குறைவாகப் பெற்றும் டிரம்ப் அதிபராகியதற்குக் காரணம் அந்த 'மதில் மேல் பூனை' மாநிலங்களுக்குள்ள தேர்தல் கல்லூரி (electoral college) ஓட்டுகளே. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து அமெரிக்காவின் 538 தேர்தல் கல்லூரி ஓட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. அதில், 270 ஓட்டுகளைப் பெறுபவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {