கிழக்கு கோதாவரி: ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் அம்பேத்கர் சிலையை சில விஷக் கிருமிகள் உடைத்து இருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்துள்ளனர். கிழக்கு கோதாவரியில் ரசோல் மண்டலில் இருக்கும் கத்ரேணிபடு என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலையை சிலர் உடைத்துச் சென்றுள்ளனர். சிலையின் மூக்குப் பகுதி சேதம் அடைந்துள்ளது.

from Oneindia - thatsTamil