
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து இறங்கும் காலம் வந்துவிட்டது. இனிமேல் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5-வது முறையாக ரோஹித் சர்மா கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பைப் பார்த்தபின் அவரை இந்திய அணியின் டி20, ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முதன்முதலில் கவுதம் கம்பீர் குரல் கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments