இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்தமாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. அவருக்கு கடைக்குட்டியாய் பிறந்த மகள்தான், பல சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் மீராபாய் சானு. போட்டிகளில் அதிக அளவு எடையைத் தூக்கும் மீராபாய் சானு, சிறுவயதில் தங்கள் வீட்டின் வறுமையால் காட்டில் இருந்து விறகுக் கட்டைகளைத் தூக்கி வந்துள்ளார்.

இதுபற்றி கூறும் அவரது அண்ணன் சனதோம்பா, “வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு, என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்