காரைக்குடி : இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் 3 மாதங்களில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என திமுக எம்.பி., கனிமொழி பிரச்சாரத்தின் போது பேசி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்பதை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

from Oneindia - thatsTamil