இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளதால் அந்தத் தொடருக்கான சிறந்த அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டமாக இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் அமையக்கூடும் என கருதப்படுகிறது. மேலும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர்களின் திறனை சோதித்து பார்க்க இது சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்