
குண்டு எறியும் போட்டியின் பிறப்பிடம் என்று கிரேக்க நாட்டைக் கூறலாம். பண்டைய காலத்தில் ராணுவ வீரர்களின் பலத்தை சோதிப்பதற்காக, இந்தப் போட்டியை கிரேக்க மன்னர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரம், தங்கள் நாட்டில்தான் குண்டு எறியும் போட்டி தோன்றியது என்று ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். இப்போட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கனமான கற்களை ஒற்றைக் கையால் தூக்கி, நீண்ட தூரம் வீசும் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
காலம் செல்லச் செல்ல, இந்த போட்டியின் வடிவம் மாறியது. கனமான கற்களுக்குப் பதில் இரும்பு குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1896-ம் ஆண்டில் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், குண்டு எறியும் போட்டி சேர்க்கப்பட்டது. இதில் பங்கேற்கும் வீரர்கள் 2.135 மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்துக்குள் இருந்துகொண்டு, ஒற்றைக் கையால் 7.26 கிலோ இரும்பு உருண்டையை வீசவேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments