இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிவெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும்.

5 ஆட்டங்கள் கொண்ட கொண்ட டி 20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்நிலையில் 4-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுகின்றன. இந்திய அணி தோல்வியடைந்த இரு ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்