யுவராஜ் சிங், யூசுப் பதானின் காட்டடி ஆட்டத்தால் ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்.

முதலில் பேட் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்