
ஆன்டிகுவாவில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரன் அவுட் செய்ய முயன்றதை தடுத்ததால் இலங்கை பேட்ஸ்மேனுக்கு ,(அப்ஸ்ட்ரக்டிங் தி பீல்ட்) நடுவர் அவுட் வழங்கினார். ஒரு நாள் போட்டிகளில் மிகவும் அரிதான அவுட்டாகவே இது பார்க்கப்படுகிறது
ஆன்டிகுவாவில் இலங்கை, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 18 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments