ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சாய்னா நெவாலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 17).

1990-ல் ஹரியாணாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் சாய்னா நெவால் பிறந்தார். சாய்னாவின் பாட்டிக்கு ஆண் குழந்தைகள் மீதுதான் விருப்பம். தனக்கு பேரன்தான் பிறப்பான் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண் குழந்தை (சாய்னா நெவால்) பிறந்ததால் கோபமடைந்த பாட்டி, ஒரு மாதம் வரை குழந்தையைப் பார்க்க வராமல் இருந்துள்ளார். ஆனால் அந்தக் குழந்தையான சாய்னாதான், இன்று மொத்த குடும்பத்துக்கும் புகழை தேடிக் கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்