வீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும். டி20 உலகக்கோப்பை போட்டிக்காக 7 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகிய சூர்யகுமார் யாதவை 3-வது டி20 போட்டியிலிருந்து கோலி நீக்கியது வியப்பாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ் 2-வது டி20 போட்டியில் அறிமுகமானார். ஆனால், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அகமதாபாத்தில் நேற்று நடந்த 3-வது ஆட்டத்தில் ரோஹித் சர்மா வரவேண்டும் என்பதற்காக எந்தவிதமான வாய்ப்பும் பெறாத சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியான முடிவாகத்தான் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்