ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கிறிஸ் மோரிஸுக்கு ஏலத்தில் கொடுக்கப்பட்ட ரூ.16 கோடி உளவுக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் சாடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்படும் தெ.ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை நடந்த எந்த ஏலத்திலும் எந்த வெளிநாட்டு வீரரும் இந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதில்லை. இந்த விலையே கிறிஸ் மோரிஸுக்கு சுமையாகவும், அழுத்தமாகவும் மாறியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்