
தோனியிடம் கற்றுக்கொண்ட வித்தைகள், என்னுடைய சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவேன் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 10-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் வலிமையான சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த் ஏற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments