
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மும்பையில் நடக்கும் லீக் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் ஐபிஎல் லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், போட்டிகளை ஹைதராபாத்துக்கு நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. மும்பையில் கரோனா நிலவரத்தையும், மகாராஷ்டிராவில் முழு லாக்டவுன் ஏதும் பிறப்பிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments