வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வகையில் அட்டவணையை தயாரித்து பிசிசிஐயின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒருநாள் போட்டி ஜூலை 13, 16, 19-ம் தேதிகளிலும் அதைத் தொடர்ந்து டி 20 தொடர் ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்