பழைய சர்ச்சை ட்வீட்டுகளுக்காக கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒலி ராபின்ஸனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், இங்கிலாந்து பிரதமர் உட்பட சில அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பெற்றிருக்கும் ஒலி ராபின்ஸன், ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திப் பாராட்டும் பெற்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்