காபூல்: ஆப்கன் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 AFS) வங்கியிலிருந்து பணமாக எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் ஆட்சி அமைந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றினர்.

from Oneindia - thatsTamil