எனக்குப் பிரியாவிடை கொடுக்கும் போட்டி சென்னையில் இருக்கும் என்று ரசிர்களுக்கு நம்பிக்கையளித்த சிஎஸ்கே கேப்டன் தோனி, “மஞ்சள் ஆடையில் அடுத்த சீசனில் என்னைப் பார்க்கலாம். ஆனால்” என்று புதிரான பதிலை அளித்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். அப்போது நான் சென்னை வருவேன். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்