
எங்களைப் போன்ற சாதாரணக் குடும்பத்தினருக்கு எங்கள் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது சாதாரண சாதனை அல்ல என்று உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் மாலிக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடர், வெளியிலிருந்து பார்க்கும்போது கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு விளையாட்டாக, 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் போன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் போன்றுகூட சிலருக்குத் தெரியலாம். இங்குள்ள 8 அணிகளின் நிர்வாகிகளும் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், பெரும் தொழிலதிபர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் விளையாட்டாக ஐபிஎல் தொடரை வளர்க்கிறார்கள் என்று பேசலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments