
விராட் கோலியின் கேப்டன்ஷி ராஜ்ஜியம் முடிந்தது என்று சொல்வதைவிட, தென் ஆப்பிரிக்கத் தொடரிலிருந்து ரோஹித் சர்மா சகாப்தம் தொடங்குகிறது என்று இந்திய கிரிக்கெட்டில் நடந்த மாற்றங்களைப் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை படுதோல்விக்குப் பின் உடனடியாகவே கோலியின் கேப்டன்ஷி பதவிப் பறிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ இந்த முடிவு எடுக்கும் முன்பாக 48 மணி நேரம் அவகாசத்தை கோலிக்குக் கொடுத்த பின்பும் அவர் பதவி விலக மறுத்துவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments