
கேப்டவுன்: கேப்டவுனில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இதுவரை கேப்டவுனில் இந்திய அணிவென்றதே இல்லை. மற்றொரு விஷயம், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆகவே, 3-வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதேசமயம், கேப்டவுனை தனது கோட்டையாக மாற்றிவைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்த மைதானத்தில் பல ஜாம்பவான் அணிகளை எல்லாம் மண்ணைக் கவ்வ வைத்துள்ளதால், வரலாறு தென் ஆப்பிரிக்காவுக்கே சாதகமாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments