
ஹைதராபாத்: "அன்று ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கூடாது என என் மகள் நிகத் ஜரீனிடம் சொன்னார்கள். இன்று அவள் உலக சாம்பியன்" என தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார் நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது.
25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி வரையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 'கனா' படத்தில் வரும் கௌசல்யா முருகேசனை போல நிஜ வாழ்வில் பல சவால்களை கடந்து வந்துள்ளார் நிகத் ஜரீன். அந்த உத்வேகக் கதையை கொஞ்சம் பார்ப்போம். உற்றார் உறவினர்களின் வன்சொல், காயம் என பல வலிகளை கடந்து சாதித்துள்ளார் அவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments