
புது டெல்லி: "2008-ல் ஒருநாள் அணியின் ஆடும் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பை எனக்கு அப்போதைய கேப்டன் தோனி வழங்காத காரணத்தால் நான் ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், அதை சச்சின் தடுத்தார்" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தகவல் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர்களில் ஒருவர் சேவாக். இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 17,253 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று ஃபார்மெட்டையும் சேர்த்து இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 92.53. அதன் காரணமாக அவருக்கு பந்து வீசும்போது எதிரணி பவுலர்கள் கொஞ்சம் அலர்ட்டாகவே பந்து வீசுவார்கள். கடந்த 2013-ல் அவர் ஓய்வு பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments