
பெஷாவர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் வேண்டுமென இருநாட்டு வீரர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்.
கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அண்டை நாடுகளாக இருந்தாலும் அரசியல் ரீதியான சிக்கல் காரணமாக நேரடி தொடர்கள் நடத்தப்படாமல் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடி இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments